உள்ளூர் செய்திகள்
- ஒட்டலுக்கு பெயர் வைப்பத்தில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பிலும் பயங்கர ஆயுதங்களுடன் மோதி கொண்டனர்.
- 8 பேரை கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளி பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 23) தரப்புக்கும், தாடிக்காரன்கொட்டாய் லஷ்மணன் (35) தரப்புக்கும் ஒட்டலுக்கு பெயர் வைப்பத்தில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பிலும் பயங்கர ஆயுதங்களுடன் மோதி கொண்டனர்.
அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த இரு தரப்பினரையும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்ந்தனர். பின்னர் அவர்கள் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் பெத்தததாளப்பள்ளியை சேர்ந்த சாந்தகுமார்(30), சக்திவேல் (23), முனியம்மாள்(45), பெருமாள்(39) தாடிக்காரன்கொட்டாய் விஜி(42), ராமன் (38), துரிஞ்சிபட்டி சக்திவேல் (24), கட்டிகானப்பள்ளி கோமதி(39) உள்ளிட்ட 8 பேரை கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் கைது செய்தனர்.