உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

Published On 2023-07-26 15:23 IST   |   Update On 2023-07-26 15:23:00 IST
  • வாய்பேச முடியாத, காது கேளாத, 3 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்றார்.
  • சிறுமியிடம், திம்மராயன் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரிய வந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை அடுத்த தக்கட்டி காலனியைச் சேர்ந்தவர் திம்மராயன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 10.03.2010 அன்று அஞ்செட்டி அருகே உறவினர் வீட்டிற்கு சென்றார்.

அந்த பகுதியைச் சேர்ந்த, வாய்பேச முடியாத, காது கேளாத, 3 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்றார்.

அப்போது எதிரில் வந்தவர்கள் இது குறித்து கேட்ட போது, சிறுமியை அவரது தாயிடம் அழைத்துச் செல்கிறேன் எனக்கூறி சென்றார்.

அங்குள்ளவர்கள் சந்தேகமடைந்து, பின் தொடர்ந்து சென்று பார்க்கும் போது சிறுமியிடம், திம்மராயன் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் திம்மராயனை அஞ்செட்டி போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று நீதிபதி சுதா தீர்ப்பு கூறினார்.

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட திம்மராயனுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்தார். அபராத தொகையை கட்டாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.

அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.

Tags:    

Similar News