உள்ளூர் செய்திகள்

லாட்டரி, பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

Published On 2023-03-02 15:23 IST   |   Update On 2023-03-02 15:23:00 IST
  • லாட்டரி சீட்டு விற்றதாக நாராயண நகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
  • பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில் அனுமதியின்றி பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லாவி பிரிவு பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக நாராயண நகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதே போல் சிங்காரபேட்டை கீழ் மத்தூர் ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாடிய முத்து, குப்பன், அண்ணாமலை, கேசவன், வரதராஜ், ராஜேஸ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News