உள்ளூர் செய்திகள்
- சுபாஷ் (29), சுரேஷ் (40) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
- அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகளையும், ரூ.1600-யையும் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னஎலத்தகிரி பகுதியில் சிலர் சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது36), சண்முகம் (40), செந்தில் (38), நந்திஷ் (31), சுபாஷ் (29), சுரேஷ் (40) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகளையும், ரூ.1600-யையும் பறிமுதல் செய்தனர்.