உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்.

500 கடத்தல் மதுபாட்டில்கள் பறிமுதல்; 2 பேர் கைது

Published On 2023-06-11 09:55 GMT   |   Update On 2023-06-11 09:55 GMT
  • கிழக்கு கடற்கரை சாலையில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
  • கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாகை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த வாஞ்சூர் பகுதியில் இருந்து 500 புதுச்சேரி மாநில மது பாட்டில்களை நான்கு சக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட வெளிப்பாளையம் ராமநாயக்கன் குல வடகரை சேர்ந்த பால்பாண்டி மற்றும் அருள்மொழித் தேவன் சத்திரம் மெயின் ரோட்டை சேர்ந்த உதயகுமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், அவர்களிடமிருந்து 500 சாராய பாட்டில்களும், நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட மது பாட்டில்களை பார்வையிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தெரிவித்தார்.

Tags:    

Similar News