உள்ளூர் செய்திகள்

மாணவர் சேர்க்கை 50 சதவீதம் உயர்வு

Published On 2022-08-13 15:44 IST   |   Update On 2022-08-13 15:44:00 IST
  • மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.
  • புதிதாக உயிரியல் பாடப்பிரிவு மாணவர்களை கவர்ந்துள்ளது

குன்னூர்,

குன்னூர் அருகே உபதலை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி நீலகிரி மாவட்டத்தின் பழமையான பள்ளிகளில் ஒன்றாக விளங்குகிறது. உபதலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆரம்ப கால கட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். பின்னர் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. இந்தநிலையில் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தாமோதரன், குன்னூர் மாவட்ட கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் ஆகியோரின் அறிவுரையின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் ஐயறின் ரெஜி மற்றும் ஆசிரியர்கள் ஒரு குழுவாக இணைந்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். இதன் மூலம் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 50 சதவீதம் உயர்ந்து உள்ளது. இதற்கு காரணம், அரசு வழங்கும் இட ஒதுக்கீடு, நிதி உதவி உள்பட பல்வேறு சலுகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதே ஆகும். மேலும் அனைத்து வகுப்புகளிலும் ஆங்கில வழி கல்வி, புதிதாக உயிரியல் பாடப்பிரிவு தொடக்கம் ஆகியவை மாணவர்களை கவர்ந்துள்ளது. இதனால் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News