உள்ளூர் செய்திகள்
கேளம்பாக்கம் அருகே குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் பலி
- விடுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே சிறுவன் ராஜேஷ் விளையாடிக்கொண்டு இருந்தான்.
- சிறுவனை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
திருப்போரூர்:
கேளம்பாக்கத்தை அடுத்த வாணியஞ்சாவடி திருவள்ளுவர் சாலையில் தனியார் விடுதி உள்ளது. இங்கு நேபாளத்தை சேர்ந்த சூரத்பகதூர் (வயது 43) என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ் (வயது5).
நேற்று மாலை விடுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே சிறுவன் ராஜேஷ் விளையாடிக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது அவன் மாயமானான். அவனை குடும்பத்தினர் தேடிவந்தனர்.
இந்தநிலையில் தண்ணீர் தொட்டியில், சிறுவன் ராஜேஷ் மூழ்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவனை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுவன் ராஜேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.