உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

திண்டுக்கல் அருகே மது விற்ற 5 பேர் கைது

Published On 2023-07-30 07:47 GMT   |   Update On 2023-07-30 07:47 GMT
  • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • அந்தப் பகுதிகளில் மது விற்ற 5 பேரை மடக்கி பிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து 53 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பம், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், ஏட்டுக்கள் சேகர், வனராஜன் மற்றும் போலீசார் திண்டுக்கல் ஆர்.எஸ்.ரோடு, நாகல் நகர், பொன்மாந்துறைபுதுப்பட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்தப் பகுதிகளில் மது விற்ற சோலைஹால் தெருவை சேர்ந்த தயாளன் (வயது 37), பெரிய கடைவீதியை சேர்ந்த சுரேஷ் (50), தோட்டனூத்து பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (43), தர்மத்துபட்டியைச் சேர்ந்த செல்வம் (37), பொன்மாந்துறை என்.ஜி.ஆர் நகரை சேர்ந்த போஸ் (33) ஆகிய 5 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 53 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News