உள்ளூர் செய்திகள்

தி.மு.க.வினர் 46 பேர் விடுதலை

Published On 2022-12-01 09:36 GMT   |   Update On 2022-12-01 09:36 GMT
  • மேட்டூர் நகர தி.மு.க. செயலாளர் காசி விஸ்வநாதன் தலைமையில் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • இது தொடர்பாக 46 பேர்கள் மீது மேட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேட்டூர்:

மேட்டூர்பஸ் நிலையத்தில் 2017 -ம் ஆண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உருவ பொம்மையை மேட்டூர்

நகர தி.மு.க. செயலாளர் காசி விஸ்வநாதன் தலைமையில் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக 46 பேர்கள் மீது மேட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மேட்டூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர் பத்மபிரியா குற்றம் சாட்டப்பட்ட காசி விஸ்வநாதன் உட்பட 46 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

Tags:    

Similar News