உள்ளூர் செய்திகள்

நெய்வேலி அருகேகத்தியை காட்டி மிரட்டிய 4 வாலிபர்கள் கைது

Published On 2023-02-17 13:42 IST   |   Update On 2023-02-18 15:50:00 IST
  • மணிகண்டன் (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் அசோக் (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததுள்ளது.
  • கத்தி மற்றும் நாட்டு துப்பாக்கியால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர்

கடலூர்:

நெய்வேலி 21-வது வட்டம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் மணிகண்டன் (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் அசோக் (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததுள்ளது.

இந்நிலையில் சம்பவ த்தன்று மணிகண்டன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அசோக் தனது நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கி ஆபாசமாக திட்டி உள்ளனர்.

மேலும் கத்தி மற்றும் நாட்டு துப்பாக்கியால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இதுகுறித்து மணிகண்டன் நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அசோக். அரவிந்தன் (23). சுந்தரச் செல்வன் (23). முருகவேல் மகன் கணேஷ்குமார் (28) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News