உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Published On 2023-01-25 09:34 GMT   |   Update On 2023-01-25 09:34 GMT
  • சீட்டாட்டம் விளையாடுவதாக ஏரியூர் காவல் நிலைய போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது .
  • 1,050 ரூபாய் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து ஏரியூர் அருகே உள்ள சிடுவம்பட்டி புளியமரத்தூர் காலனி சுடுகாட்டில் பணம் வைத்து மங்காத்தா சீட்டாட்டம் விளையாடுவதாக ஏரியூர் காவல் நிலைய போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது .

இதன் பேரில் காவல் உதவி ஆய்வாளர் மாரி தலைமையிலான போலீசார் சிடுவம்பட்டி புளியமரத்தூர் காலனி சுடுகாட்டில் பணம் வைத்து மங்காத்தா சீட்டாட்டம் விளையாடிக் கொண்டிருந்த நாகராஜ் (வயது 55),வெங்கடேசன் (38), சிலம்பரசன் (33), சின்ன கண்ணு (60) ஆகிய நான்கு பேரை சுற்றி வளைத்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் பணம் வைத்து மங்காத்தா சீட்டாட்டம் விளையாடியதை ஒப்புக்கொண்டனர். இதன் பேரில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 1,050 ரூபாய் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News