உள்ளூர் செய்திகள்

திட்டக்குடி பகுதியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

Published On 2022-11-01 07:24 GMT   |   Update On 2022-11-01 07:24 GMT
  • திட்டக்குடி பகுதியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • பின்னர் 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.

கடலூர்:

திட்டக்குடி, ராமநத்தம் பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ரகசிய தகவலின் பேரில் நேற்று ராமநத்தம் பொதுப்பணித்துறை அலுவலகம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்துக்கொண்டும், குடித்துக்கொண்டும் இருந்த 4 பேரை ராமநத்தம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் திட்டக்குடி பஸ் நிலையத்தில் ஆவின் பாலகம் அருகில் நேற்று மாலை 10 கிராம் கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை திட்டக்குடி போலீசார் கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.

Tags:    

Similar News