உள்ளூர் செய்திகள்

செஞ்சி அருகே வீடு புகுந்து திருடிய 4 பேருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

Published On 2022-12-24 08:13 GMT   |   Update On 2022-12-24 08:13 GMT
  • மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்து பணம் மற்றும் நகை ஆகியவைகளை கொள்ளையடித்து சென்றனர்.
  • 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் மேலும் ஒவ்வொரு வழக்கிலும் தலா ரூ2,000 வீதம் ரு 4,000 அபராதம்.

 விழுப்புரம்:

செஞ்சியை அருகே அவலூர்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் உமா ஆகியோரின் வீடுகளில் கடந்த 10.1. 2022 அன்று மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்து பணம் மற்றும் நகை ஆகியவைகளை கொள்ளையடித்து சென்றனர். 

இதுகுறித்து அவலூ ர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி வயக்காடு கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (வயது 37), சேலத்தை சேர்ந்த அண்ணாமலை (39), குமார், போளூரை சேர்ந்த சங்கர் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்தனர். இவர்கள் மீது செஞ்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது, வழக்கை விசாரித்த செஞ்சி குற்றவியல் நீதிமன்ற நடுவர் மனோகரன் தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 4 பேருக்கும் ஒவ்வொரு வழக்கிலும் தலா 3 ஆண்டு வீதம் 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் மேலும் ஒவ்வொரு வழக்கிலும் தலா ரூ2,000 வீதம் ரு 4,000 அபரா தமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

Similar News