உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

நாய் குறுக்கே வந்ததால் ஜீப் தலைகுப்புற கவிழ்ந்து 4 பேர் காயம்

Published On 2022-09-10 05:30 GMT   |   Update On 2022-09-10 05:30 GMT
  • அய்யலூர் அருகே கார் வந்தபோது நாய் குறுக்கே வந்ததால் திடீரென பிரேக் போட்டார்.
  • அப்போது கார் நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

வடமதுரை:

விருத்தாசலத்தை சேர்ந்தவர் சுகுமார்(32) என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி ராஜலட்சுமி(29), மகள் இஷானா, உறவினர் சுமதி(48) ஆகியோருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.

கொடைக்கானலில் பல்வேறு இடங்களை பார்த்துவிட்டு இன்று காலை மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அய்யலூர் அருகே கார் வந்தபோது நாய் குறுக்கே வந்ததால் திடீரென சுகுமார் பிரேக் போட்டார். அப்போது கார் நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரை மீட்டனர். மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த 4 பேரும் திண்டுக்கல் அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக்கொண்டனர்.

இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News