உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

வாலிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 4 பேர் கைது

Published On 2022-08-21 09:09 GMT   |   Update On 2022-08-21 09:09 GMT
  • மாதுளம் பேட்டை வினோத் என்பவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் படுகாயமடைந்தார்.
  • அவர்களிடமிருந்து 2 அரிவாள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கும்பகோணம்:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று முன்விரோதம் காரணமாக மாதுளம் பேட்டை வினோத் என்பவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் படுகாயம் அடைந்தார்.

இந்த வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா உத்தரவுப்படி, கும்பகோணம் உட்கோட்ட காவல் துணை கண்காணி ப்பாளர் அசோகன் மற்றும் மேற்கு இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோரின் மேற்பா ர்வையில் தனிப்படை சப்இன்ஸ்பெக்டர்கீர்த்தி வாசன், ராஜா,செல்வகுமார், பாலசுப்பி ரமணியம், நாடிமுத்து, ஜனார்த்தனன்.

மேற்கு காவல் நிலைய போலீசார் ஆகியோர்துரிதமாக செயல்பட்டு சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான, கும்பகோணம்பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஆறுமுகம், கார்த்தி, ஆல்பாகுமார் ஆகியோரை பிடித்து விசாரித்து அவர்களி டமிருந்து 2 அரிவாள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர்நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 நபர்களை தேடி வருகி ன்றனர்.

Tags:    

Similar News