உள்ளூர் செய்திகள்

4 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-02-16 07:13 GMT   |   Update On 2023-02-16 07:13 GMT
  • பரமத்தி வேலூர் தாலுகா கரிச்சிபாளையம் அருகே நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, மகேஸ்வரி சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கரிச்சிபாளையம் அருகே வைராபாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 58). கூலித் தொழிலாளி. இவரது மகள் மகேஸ்வரி(34). மாற்றுத்திறனாளி.

இவருக்கும் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சௌந்தர்ராஜ் (36) என்பவருக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. சௌந்தர்ராஜ் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆபீஸ் அசிஸ்டெண்டாக வேலை பார்த்து வருகிறார். 4 மாத கர்பிணியாக இருந்த மகேஸ்வரி, கடந்த 8-ந் தேதி பெற்றோர் வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார்.

அப்போது, தான் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் குழந்தை நல்லபடியாக பிறக்குமா? என்ற பயத்தில் இருந்த அவர், தான் பலவீனமாக இருப்பதால் பிரசவ வலியை தன்னால் தாங்க முடியுமா என்றும் தனது அம்மாவிடம் அடிக்கடி கூறி அழுது வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, மகேஸ்வரி சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது தாய் சாவித்திரி கதறி துடித்தார். பின்னர் இதுகுறித்து நல்லூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்ற னர்.

இந்நிலையில் மகேஸ்வரிக்கு திருமணம் ஆகி 5 மாதங்களே ஆவதால், தற்கொலை தொடர்பாக திருச்செங்கோடு சப் கலெக்டர் கவுசல்யா விசா ரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News