உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு 4 நாட்கள் சிறப்பு பஸ்கள்

Published On 2023-01-23 09:25 GMT   |   Update On 2023-01-23 09:25 GMT
  • குடும்பம், குடும்பமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
  • பக்தர்களும் பஸ், வாகனங்களில் அதிகளவில் பழனி கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

பொள்ளாச்சி,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் குடும்பம், குடும்பமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

இதனால் எப்போதுமே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். வருகிற 27-ந் பழனி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதனை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தர உள்ளனர். தற்போது தைப்பூச திருவிழாவும் வர உள்ளது.

இதனையொட்டி திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து கோவிலுக்கு பாத யாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதுதவிர பக்தர்களும் பஸ், வாகனங்களில் அதிகளவில் பழனி கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

அடுத்த மாதம் 5-ந் தேதி பழனியில் தைப்பூச திருவிழா நடக்க உள்ளது. இதனை காண பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மக்கள் கோவிலுக்கு செல்வார்கள்.

பக்தர்களின் வசதிக்காக பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பழனிக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற பிப்ரவரி மாதம் 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை 4 நாட்கள் தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக சுழற்சி முறையில் கூடுதலாக 25 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த நேரத்தில் கூட்டத்தை பொறுத்து அதிக பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News