உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது

Published On 2023-04-27 09:29 GMT   |   Update On 2023-04-27 09:29 GMT
  • லாட்டரி சீட்டு விற்றதாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • ரூ.3500 மதிப்புள்ள கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட போதை தடுப்பு பிரிவு போலீசார் பாஞ்சாலியூர், கிருஷ்ணகிரி டோல்கேட், வேப்பனப்பள்ளி கோவிந்த அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த காவேரிப்பட்டினம் பகுதியை சேர்ந்த சுதந்திரம் (எ) பொன்வண்டு (38), திருப்பத்தூர் மாவட்டம் சி.கே ஆச்சிராமம் பகுதியை சேர்ந்த திலீப் (எ) தனசேகரன், வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமுற்று கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் (26), ஓசூர் பேகேப்பள்ளி பகுதியை சேர்ந்த கனசேயம் மண்டால் (40) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இவர்களிடம் இருந்து ரூ.3500 மதிப்புள்ள கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News