உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Published On 2023-03-14 15:40 IST   |   Update On 2023-03-14 15:40:00 IST
  • தளி போலீசார் ஜவகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • அவர்களிடமிருந்து பணம் ரூ.800 பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி போலீசார் ஜவகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜப்பா (60) முத்துச்செட்டி (75) முத்துராஜ் (50 )முத்துராஜ் (55 ) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பணம் ரூ.800 பறிமுதல் செய்யப்பட்டது.  

Tags:    

Similar News