உள்ளூர் செய்திகள்

சென்னை தாம்பரத்தில் 3-ம் நம்பர் லாட்டரி சீட்டு மொத்த வியாபாரி சிக்கினார் விழுப்புரம் தனிப்படை போலீசார் அதிரடி

Published On 2023-06-30 08:07 GMT   |   Update On 2023-06-30 08:07 GMT
  • ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் 3-ம் நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • கும்பலை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

விழுப்புரம்:

தமிழகம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலில் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் 3-ம் நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை வாங்கி தங்களின் பணத்தை இழந்த பல கூலித் தொழிலாளிகள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்பு ரம் மாவட்டத்திற்கு புதியதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின்பேரில் 3-ம் நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி லாட்டரி சீட்டு விற்பனை செய்த முகவர்களை கைது செய்தனர். இவர்களை ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்தனர். இதில் இவர்களுக்கு லாட்டரி சீட்டு வழங்கும் மொத்த வியாபாரி சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த முருகநாதன் (வயது 50) என்பது தெரியவந்தது.

இந்நிலையில் சென்னைக்கு விரைந்த விழுப்புரம் தனிப்படை போலீசார், தாம்பரத்தில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற முருகநாதனை நேற்று மடக்கிப் பிடித்தனர். அவரை விழுப்புரம் அழைத்து வந்து தாலுக்கா போலீசாரிடம் ஓப்படைத்தனர். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள தனி அறையில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முகவர்கள் யார்? யார்? என்பதும், இதில் போலீசார் யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா? யார், யார் லஞ்சம் கொடுத்து லாட்டரி விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News