உள்ளூர் செய்திகள்

ராசிபுரத்தில் 3640 பருத்தி மூட்டைகள் ரூ.1.23 கோடிக்கு ஏலம்

Published On 2022-07-08 09:45 GMT   |   Update On 2022-07-08 09:45 GMT
  • ராசிபுரம் பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்சிஎம்எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.
  • 3640 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 23 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்சிஎம்எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.

இந்த ஏலத்தில் முத்துக்–காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்க–ளாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமி பாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்தி–ருந்தனர்.

இந்த ஏலத்தில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.

இந்த ஏலத்தில் 3640 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 23 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் ஆர்சிஎச் ரகப் பருத்தி 3170 மூட்டைகளும், சுரபி ரக பருத்தி 488 மூட்டைகளும், கொட்டு பருத்தி 22 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டிருந்தன.

இதில் ஆர்சிஏச் ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.8888-க்கும், அதிக பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.10069-க்கும், சுரபி ரகப் பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.8900 முதல் அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.9799-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்த–பட்சம் ரூ.4583 முதல் அதிகப்பட்சமாக ரூ.6700-க்கும் ஏலம் விடப்பட்டது.

Tags:    

Similar News