உள்ளூர் செய்திகள்
லாட்டரிச்சீட்டு விற்ற 34 பேர் கைது
- லாட்டரி விற்பனை நடை பெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர்.
- ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, மத்தூர் பகுதிகளை சேர்ந்த 34 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடை பெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர்.
அந்த வகையில் லாட்டரி விற்றதாக கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, ஓசூர், பாகலூர், பேரிகை, சூளகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, கெல மங்கலம், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, மத்தூர் பகுதிகளை சேர்ந்த 34 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுக்கள் மற்றும், ரூ.4,500 பணம் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.