உள்ளூர் செய்திகள்

கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் மழை காரணமாக ஒதுங்கி நின்ற காட்சி.

கடலூர் மாவட்டத்தில் 323.80 மி.மீ மழை பதிவு: வருகிற 6-ந்தேதி முதல் கனமழை எச்சரிக்கை

Published On 2023-11-03 14:38 IST   |   Update On 2023-11-03 14:38:00 IST
குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. நாளை முதல் வருகிற 6-ம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்தனர். மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் பாதிப்படைந்து வருகின்றது.

கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லிமீட்டரில் பின்வருமாறு- அண்ணாமலைநகர் - 74.2 சிதம்பரம் - 38.6 கடலூர் - 33.4 லால்பேட்டை - 25.0 பரங்கிப்பேட்டை - 22.5 ஆட்சியர் அலுவலகம் - 21.8 காட்டுமன்னார்கோயில் - 17.0 புவனகிரி - 15.0 எஸ்ஆர்சி குடிதாங்கி - 13.5 கொத்தவாச்சேரி - 12.0 மீ-மாத்தூர் - 12.0 சேத்தியாதோப்பு - 8.2 வானமாதேவி - 8.0 வடக்குத்து - 6.4 குறிஞ்சிப்பாடி - 5.0 பண்ருட்டி - 3.0 கீழச்செருவாய் - 3.0 பெல்லாந்துறை - 2.0 விருத்தாசலம் - 1.0 குப்பநத்தம் - 1.0 தொழுதூர் - 1.0 மொத்தம் - 323.80 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News