உள்ளூர் செய்திகள்

ஆட்டோ டிரைவருக்கு 3 ஆண்டு ஜெயில்

Published On 2023-05-04 09:05 GMT   |   Update On 2023-05-04 09:05 GMT
  • குள்ளம்பட்டி வாய்க்கால் பாலம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மினி ஆட்டோ மோதியதில் பாலத்தில் இருந்து கீழே தண்ணீரில் விழுந்து தலையில் படுகாயம் அடைந்த முருகன் உயிரிழந்தார்.
  • காயம் அடைந்த நிர்மலா, மற்றும் 2 வயது குழந்தை எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

சங்ககிரி:

சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள மோட்டூர் காட்டுவளவு ஆவணியூரை சேர்ந்தவர் முருகன் (வயது 35). தறிதொழிலாளி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ந்தேதி காலை தனது மொபட்டில் மனைவி நிர்மலா (23) மற்றும் 2 வயது மகளுடன் வட்ராம்பாளையத்தில் இருந்து ஆவணியூரில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

குள்ளம்பட்டி வாய்க்கால் பாலம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மினி ஆட்டோ மோதியதில் பாலத்தில் இருந்து கீழே தண்ணீரில் விழுந்து தலையில் படுகாயம் அடைந்த முருகன் உயிரிழந்தார். காயம் அடைந்த நிர்மலா, மற்றும் 2 வயது குழந்தை எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த விபத்து குறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய காவேரிப்பட்டி கிராமம் ஒக்கிலிப்பட்டி கீழ்மோட்டூ ரை சேர்ந்த அருணாசலம் (58) என்பவரை ைகது செய்தனர்.

இது குறித்து சங்ககிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாபு, விபத்தை ஏற்படுத்திய மினி ஆட்டோ டிரைவர் அருணாசலத்திற்கு 3 ஆண்டு ெஜயில் தண்டனையும், ரூ.2500 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

Tags:    

Similar News