உள்ளூர் செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
- அலசநத்தம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- உடனே 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.150-யை பறிமுதல் செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ போலீஸ் நேற்று அலசநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது40), சுப்ரமணி (42), மாது (38) ஆகிய 3 பேரும் சூதாடியது தெரியவந்தது.
உடனே 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.150-யை பறிமுதல் செய்தனர்.