உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 3 பேர் கைது

Published On 2023-03-14 15:35 IST   |   Update On 2023-03-14 15:35:00 IST
  • அதே பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் வயது (27) மாது (26), நடராஜ் (27) இந்த மூன்று பேரும் பைக்கில் வேகமாக சென்றுள்ளனர்.
  • கோபி தட்டி கேட்டு, மெதுவாக செல்ல வேண்டியது தானே என்று கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாஸ்கர் தாஸ் பகுதியைச் சேர்ந்த மோகன் மகன் கோபி (வயது 21). இவர் தனியார் நிறுவன ஊழியர்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் வயது (27) மாது (26), நடராஜ் (27) இந்த மூன்று பேரும் பைக்கில் வேகமாக சென்றுள்ளனர். இதனை கோபி தட்டி கேட்டு, மெதுவாக செல்ல வேண்டியது தானே என்று கூறியுள்ளார்.

இதனால் ஏற்படத்த தகராறில் 3 பேரும் கோபியை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த கோபி கொடுத்த. புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். 

Tags:    

Similar News