உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி அருகே பெண் உள்பட 3 பேர் தற்கொலை

Published On 2022-06-10 04:52 GMT   |   Update On 2022-06-10 04:52 GMT
  • தேனி அருகே பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்
  • சம்பவங்கள் குறித்து போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே தாடிச்சேரியை சேர்ந்தவர் பரமன் (வயது 36). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் காலில் அடிபட்டது. அதன் பின்னர் வேலைக்குச் செல்லாமல் குடிபழக்கத்திற்கு அடிமையானார்.

இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று அவரது மனைவி வெளியூர் சென்ற நிலையில் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியகுளம் அருகே பங்களாபட்டியை சேர்ந்தவர் அண்ணாதுரை (40). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அண்ணாத்துரையை பிரிந்து சென்றுவிட்டார்.

தனது மகனுடன் வசித்து வந்த அண்ணாதுரை அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடமலைக்குண்டு அருகே தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் சேகர் மகள் கவிதா (30). இவருக்கும் கல்லுப்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 1 மகன் உள்ளார்.

ரமேஷ் கேரளாவிற்கு வேலைக்கு சென்று வந்த நிலையில் கவிதா வயிற்று வலியால் அவதிப்பட்டு விஷ மருந்தை குடித்தார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News