உள்ளூர் செய்திகள்
மரக்காணம் அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது
- ஆறுமுகம் (வயது 28), சத்யா (32) ஆகிய 2 பேரும் சாராயம் விற்றனர்.
- போலீசார் இவர்களி டமிருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்:
மரக்காணம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஆறுமுகம் (வயது 28), சத்யா (32) ஆகிய 2 பேரும் சாராயம் விற்றனர். இவர்களை கைது செய்த போலீசார் இவர்களி டமிருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல கோட்டி க்குப்பம் மெயின் ரோட்டில் சாராயம் விற்பனை செய்து கொண்டி ருந்த குப்பு (45) கைது செய்து 15 லிட்டர் சாரா யம் பறிமுதல் செய்தனர். இந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.