உள்ளூர் செய்திகள்

கைதான வாலிபர்கள்.

திண்டுக்கல் அருகே வாகனத்தை வழிமறித்து பணம், செல்போன் பறிப்பு -3 பேர் கைது

Published On 2023-05-26 07:58 GMT   |   Update On 2023-05-26 07:58 GMT
  • வாகனத்தை வழிமறித்து ரூ.22 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்ப முயன்ற 3 வாலிபர்களை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
  • இது குறித்து தாடி க்கொம்பு போலீசார் அவர்களை கைது செய்து வாலிபர்கள் மீது வேறு ஏதேனும் வழிப்பறியில் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 45). இவர் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு செட்டி நாயக்கன்பட்டி வழியாக தனது மனைவி ரம்யாவுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 பேர் திடீரென இவரை மறித்து ரூ.22 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்ப முயன்றனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

இந்த தாக்குதல் குறித்து தாடிக்கொம்பு போலீ சாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. சப்-இன்ஸ்பெ க்டர் பிரபாகரன், தனிப்பி ரிவு ஏட்டு பழனிச்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வழி ப்பறியில் ஈடுபட்டது மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டி யைச் சேர்ந்த சரண்குமார் (21), முருகபவனம் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் செல்வராஜ் (21), சூர்யபிரகாஷ் (19) ஆகியோர் என தெரிய வரவே அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வழிப்பறி செய்ய ப்பட்ட பணம் மற்றும் டூவீ லரை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து தாடி க்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாச லம் விசாரணை நடத்தி வருகிறார். இவர்களுக்கு வேறு ஏதேனும் வழிப்பறியில் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News