உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் தனியார் பள்ளி கலவர வழக்கில் மேலும் 3 பேர் கைது

Published On 2022-08-28 06:00 GMT   |   Update On 2022-08-28 06:00 GMT
  • சின்னசேலம் தனியார் பள்ளி கலவர வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்பட காட்சிகளை வைத்து அவர்களை சிறப்பு புலனாய்வு செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் வளையமாதேவி கிராமம் தெற்கு தெருவை ேசர்ந்தவர் பிரகாஷ் (வயது 24) ,கள்ளக்குறிச்சி வட்டம் உலகங்காத்தான் என்ற கிராமத்தைச் சேர்ந்த இந்திரா நகர் சுப்பிரமணி செந்தமிழன் (27), சின்னசேலம் வட்டம் பங்காரம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த முரளி. இவர்கள் 3 பேரும் சின்னசேலம் பள்ளி கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். சிறப்பு புலனாய்வு குழு போலீசார் குற்றவாளிகள் கலவரத்தில் ஈடுபட்டு, போலீஸ் வாகனத்தின் மீது கற்களை வீசி சேதப்படுத்தியது தொடர்பாக வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்பட காட்சிகளை வைத்து அவர்களை சிறப்பு புலனாய்வு போலீசார் இன்று கைது செய்து அவர்களை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள்.

Tags:    

Similar News