உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே கனியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது

Published On 2023-01-06 08:29 GMT   |   Update On 2023-01-06 08:29 GMT
  • கலவரத்தின் போது பள்ளி சொத்துகள் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்தனர்.
  • சொத்துகளை சேதப்படுத்தியதாக மேலும் 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் கலவரம் நடந்தது. இந்த கலவரத்தின் போது பள்ளி சொத்துகள் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்ததோடு, போலீசார் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த கலவரத்தை தூண்டி யவர்கள் மற்றும் கலவ ரத்தில் கலந்து கொண்டு பள்ளிசொத்துகளை சேதப்படுத்தியவர்களை சிறப்பு புலனாய்வு குழுவி னர் கைது செய்து வருகின்றனர். 

அந்த வகையில் இது தொடர்பாக இதுவரை 436 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலை யில் கலவரத்தின் போது பள்ளி சொத்துகளை சேதப்ப டுத்தியதாக கள்ளக் குறிச்சி அருகே லட்சியம் கிரா மத்தை சேர்ந்த மணி கண்டன் (வயது 32), இரு சக்கர வாகனங்களை சேதப்டுத்தியதாக சங்கரா புரம் தாலுகா மூரார்பா ளையம் கிராமத்தை சேர்ந்த மதுபாலன் (22), போலீஸ் வாகனங்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய சின்ன சேலம் தாலுகா ராயர்பா ளை யத்தை சேர்ந்த சீராளன் (28) ஆகிய 3 பேரை வீடியோ ஆதா ரங்களை வைத்து கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News