உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

கம்பம்: தாய், மகள் உள்பட 3 பெண்கள் மாயம்

Published On 2023-04-06 11:05 IST   |   Update On 2023-04-06 11:05:00 IST
  • குடும்பத்தில் கருத்து வேறுபாடு மற்றும் பிரச்சினைகள் காரணமாக மாயமானார்கள்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வரு கின்றனர்.

கம்பம்:

கம்பம் மாலை யம்மாள்புரத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுகன்யா(28). இவர்களுக்கு சுபிக்ஷா என்ற மகளும், சக்தி என்ற மகனும் உள்ள னர். குமார் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் ஜே.சி.பி டிரை வராக பணிபுரிந்த போது சுகன்யாவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

கடந்த சில நாட்களாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்றும் தம்பதி இடையே தகராறு நடந்தது. இதனைதொடர்ந்து குமார் வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் மகன் சக்தியை பள்ளிக்கு அனுப்பி விட்டு மகள் சுபிக்ஷாவுடன் சுகன்யா வெளியே சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த குமார் மனைவி மற்றும் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பா ர்த்தார். எங்கும் கிடைக்க வில்ைல. இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கம்பம் மாலையம்மா ள்புரத்தை சேர்ந்தவர் கோபால் மனைவி விஜயா(47). இவரது மகன் ராம்குமார். திருப்பூரில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் விஜயா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராம்குமார் கம்பத்திற்கு வந்து தனது தாயை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத தால் கம்பம் வடக்கு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விஜயாவை தேடி வரு கின்றனர்.

Tags:    

Similar News