உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவிகளை படத்தில் காணலாம்.


சிவகிரி சேனைத்தலைவர் பள்ளி மாணவிகள் 3 பேர் திறனாய்வு தேர்வில் வெற்றி

Published On 2022-07-10 08:43 GMT   |   Update On 2022-07-10 08:43 GMT
  • சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் தற்போது 9-ம் வகுப்பு பயிலும் மாணவிகள் முகாசினி, ஹரிணி தங்கம், ரவீணா ஆகியோர் தேர்ச்சி பெற்றனர்.
  • அரசு சார்பில் ஆண்டுதோறும் தலா ரூ.1,000 வீதம் பிளஸ்-2 வரை வழங்கப்படும்.

சிவகிரி:

சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகள் 2021-2022-ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற (என்.எம்.எம்.எஸ்) தேசிய திறனாய்வு தேர்வில் கலந்து கொண்டனர்.

இந்த தேர்வில் சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் தற்போது 9-ம் வகுப்பு பயிலும் மாணவிகள் முகாசினி, ஹரிணி தங்கம், ரவீணா ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் தலா ரூ.1,000 வீதம் பிளஸ்-2 வரை வழங்கப்படும்.

தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் செயலாளர் தங்கேஸ்வரன், சிவகிரி சேனைத்தலைவர் மகாசபை தலைவர் மாரியப்பன், பொருளாளர் ஆறுமுகம், துணைத்தலைவர் மூக்கையா, தலைமை ஆசிரியர் சக்திவேலு மற்றும் ஆசிரிய - ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் சேனைத்தலைவர் மகாசபை அறப்பணி குழு, கல்வி பணிக்குழு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News