உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் 3 நாட்கள் ஜமாபந்தி நிகழ்ச்சி

Published On 2022-06-26 10:05 GMT   |   Update On 2022-06-26 10:05 GMT
  • ஊட்டி வட்டம், தூனேரி, சோலூா், ஊட்டி நகரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஜமாபந்தி நடத்தப்பட உள்ளது.
  • பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் கிராமத்திற்கான வருவாய் தீா்வாயம் நடைபெறும் நாளில் ஊட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் அளிக்கலாம்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி வட்டம், தூனேரி, சோலூா், ஊட்டி நகரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஜமாபந்தி நடத்தப்பட உள்ளது.

இது தொடா்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியிருப்பதாவது:-

ஜமா பந்தி நடைபெறவுள்ள 3 நாள்களில் பொதுமக்கள் தங்களது மனுக்களை தாங்கள் குடியிருந்து வரும் வருவாய் கிராமத்துக்கான வருவாய் தீா்வாயம் நடைபெறும் நாளில் சம்பந்தப்பட்ட வருவாய் தீா்வாய அலுவலரிடம் நேரடியாக அளிக்கலாம்.தூனேரி குறு வட்டத்திற்குள்பட்ட கிராமங்களுக்கு ஜூன் 28, 29-ந் தேதியும், ஊட்டி நகரத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கு ஜூன் 30-ந் தேதியும் வருவாய் தீா்வாயம் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் கிராமத்திற்கான வருவாய் தீா்வாயம் நடைபெறும் நாளில் ஊட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News