உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது

Published On 2022-11-08 10:06 GMT   |   Update On 2022-11-08 10:06 GMT
  • கஞ்சா விற்பனை செய்வதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • 3 பேரையும் கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சூலூர்:

கருமத்தம்பட்டி அருகே கணியூர் வேட்டைக்காரன் குட்டை பகுதியில் மர்ம நபர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொ ண்டனர். அப்போது வேட்டைக்காரன் குட்டை பகுதியில் ஆதவன் மில் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பன்மாலை கண்கார், திகம்பர் கண்கார், தீபக் பிரதான் என தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்த போது அதில் 500 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து 3 பேரையும் கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

Similar News