உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 272 மனுக்கள் பெறப்பட்டன

Published On 2023-02-21 15:05 IST   |   Update On 2023-02-21 15:05:00 IST
  • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
  • கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்டத்தின் அனைத்து துறை தலைமை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட

அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 272 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களைப் பெற்றுக் கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட அலுவலர்க ளிடம் வழங்கி விரைவில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து, கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை, கலெக்டர் நேரில் சந்தித்து அவர்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். அப்போது, காதொலிக் கருவி கோரி மனு அளித்த 2 மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்த கலெக்டர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.2,800/- வீதம், மொத்தம் ரூ.5,600/- மதிப்பில் 2 காதொலிக் கருவிகளை அவர்களுக்கு வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி மேகலை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். மனுக்கள் கொடுத்த உடனேயே காதொலி கருவி வழங்கிய மாவட்ட

கலெக்டருக்கு பயனாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News