உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் நடும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

விளாத்திகுளம் அருகே 2500 மரக்கன்றுகள் நடும்பணியை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.

Published On 2023-06-08 14:09 IST   |   Update On 2023-06-08 14:09:00 IST
  • கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விளாத்திகுளம் நெடுஞ்சாலை உட்கோட்டம் சார்பாக 2500 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.
  • முதற்கட்ட பணியாக 150 மரக்கன்றுகள் நடும் பணியை குளத்தூரில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

விளாத்திகுளம்:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விளாத்திகுளம் நெடுஞ்சாலை உட்கோட்டம் சார்பாக பாளையங்கோட்டை-குறுக்குச்சாலை, குளத்தூர்-விளாத்திகுளம், நாகலாபுரம்- பந்தல்குடி, அருப்புக்கோட்டை சாலையில் இருபுறமும் 2500 மரக்கன்றுகள் நடுவதன் முதற்கட்ட பணியாக 150 மரக்கன்றுகள் நடும் பணியை குளத்தூரில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் விளாத்தி குளம் போலீஸ் டி.எஸ்.பி. ஜெயச்ச ந்திரன், நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கிறிஸ்டோபர், இளநிலை பொறியாளர் எபநேசர், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி செல்வபாண்டி, ஒன்றிய துணைச்செயலாளர் ராஜபாண்டி, ஒன்றிய இளைஞரணி துணை அமை ப்பாளர் பேச்சிமுத்து, சா லை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News