உள்ளூர் செய்திகள்

சாத்தான்குளம் பள்ளியில் ஊரக திறனாய்வு தேர்வில் 244 மாணவர்கள் பங்கேற்பு

Published On 2022-12-18 09:34 GMT   |   Update On 2022-12-18 09:34 GMT
  • 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பிளஸ்-2 படிக்கும் வரை உதவி வழங்கப்பட்டு வருகிறது.
  • சாத்தான்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் 244 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

சாத்தான்குளம்:

தமிழகத்தில் கிராமபுற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பிளஸ்-2 படிக்கும் வரை உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்வித்துறை ஏற்பாட்டின் படி தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது.

சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. ஆர்.எம்.பி. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இதற்காக 247 மாணவர்கள் விண்ணப்பத்திருந்தனர். இதில் சாத்தான்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் 244 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

தேர்வுக்கான ஏற்பாடுகளை கல்வித்துறை உத்தரவின் பேரில் பள்ளி தாளாளர் கிருபாகரன், தலைமைஆசிரியர் ஜெபசிங்இம்மானுவேல் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News