உள்ளூர் செய்திகள்
விழாவில் மரக்கன்றுகள் நடப்பட்ட காட்சி.

கடையநல்லூரில் மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2022-06-04 14:52 IST   |   Update On 2022-06-04 14:52:00 IST
கடையநல்லூரில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
கடையநல்லூர்:

நெல்லை வன உயிரின சரணாலயம் மற்றும் வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு வன ரேஞ்சர் சுரேஷ் தலைமை தாங்கினார். மேல்நிலைப்பள்ளி முதல்வர் மங்களத்துரை வரவேற்று  பேசினார். சிறப்பு விருந்தினராக கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் ஹபிபூர் ரஹ்மான்  மரக்கன்றுகளை நட்டு சிறப்புரையாற்றினார். 

நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் முஹைதீன் கனி, முஹம்மது அலி, முருகன், வனவர் முருகேசன், அம்பலவாணர், வனக் காப்பாளர்கள் அய்யப்பன், ராமச்சந்திரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள்  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News