உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

தீக்குளித்த வாலிபர் சாவு

Published On 2022-06-04 14:39 IST   |   Update On 2022-06-04 14:39:00 IST
மயிலாடுதுறை அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வாலிபர் பலியானார்.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை அருகே பரசலூர் கிராமம் கலைஞர் நகரை சேர்ந்தவர் ரவி மகன் சுரேஷ் (வயது 26). திருமணமாகாதவர். காய்கறி கடையில் வேலை செய்து வருகிறார்.இவர் 2 நாட்களுக்கு முன்பு மன விரக்தியில் மது அருந்தியுள்ளார்.

இந்நிலையில் வீட்டுக் கொல்லையில் வாகனத்தில் இருந்த பெட்ரோலை பிடித்து உடலில் ஊற்றிக்கொன்டு தற்கொலை முயற்சியில் ஈ;டுபட்டுள்ளார். அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைகாக சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி உள்ளனர். 

அங்கே சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். தகவலறிந்த திருவாரூர் மேஜிஸ்ட்ரேட் நேரடி வாக்குமூலம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து செம்பனார்கோயில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கல்யாணசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Tags:    

Similar News