உள்ளூர் செய்திகள்
தீயில் எரிந்து சேதமான எள் பட்டறை.

எள் பட்டறைக்கு தீ வைப்பு

Published On 2022-06-04 14:17 IST   |   Update On 2022-06-04 14:17:00 IST
வேதாரண்யம் அருகே வயலில் அறுவடை செய்து வைத்திருந்த எள் பட்டறைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா குரவப்புலத்தை சேர்ந்தவர் மனோகரன் இவர் தனக்கு சொந்தமான வயலில் எள் சாகுபடி செய்து இருந்தார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு எள்செடிகளை அறுவடை செய்து வயலில்பட்டறையாக வைத்து மூடி வைத்திருந்தார் சம்பவத்தன்று எள் பட்டறைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டனர்.

இதில் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள எள் மற்றும் எள் செடிகள் முற்றிலும் எரிந்து சேதமானதுஇதுகுறித்து மனோகரன்வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். வேதாரண்யம் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News