உள்ளூர் செய்திகள்
பட்டாசு தொழிலாளி வெடி விபத்தில் படுகாயம்
விருதுநகர் அருகே நடந்த வெடி விபத்தில் பட்டாசு தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள அம்மன்கோவில் பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (62). இவர் செங்கமலம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் போர்மேனாக பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று ஆலையில் உள்ள கழிவு பட்டாசுகளை எரித்தார். அப்போது பட்டாசுகள் வெடித்ததில் கிருஷ்ணசாமி தீக்காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் கிருஷ்ணசாமி சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.