உள்ளூர் செய்திகள்
காரியாபட்டி அருகே நடந்த கோவில் கும்பாபிஷேகத்தில் பெண்களிடம் 8 பவுன் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரில் கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
அரசகுளத்தைச் சேர்ந்த மீனாட்சி (வயது 55) என்பவர் கூட்ட நெரிசலில் நின்று கொண்டு கும்பாபி ஷேகத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதேபோல் அரசகுளத்தைச் சேர்ந்த தமிழரசி என்பவரிடமும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் 3 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.
2 பேரும் கொடுத்த புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்துச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.