உள்ளூர் செய்திகள்
சாவு

தொழிலாளி மர்மச்சாவு

Published On 2022-06-04 06:21 GMT   |   Update On 2022-06-04 06:21 GMT
சாத்தூர் அருகே உள்ள கண்மாயில் தொழிலாளி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி (வயது 23). தொழிலாளியான இவர் நேற்றிரவு கே.மேட்டுப்பட்டியில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தி னர் பெருமாள்சாமியை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. 

இந்த நிலையில் பெருமாள்சாமி கே.மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள கண்மாயில் பிணமாக கிடந்தார். அருகிலேயே அவரது மோட்டார் சைக்கிளும் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இருக்கன்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

பெருமாள்சாமி விபத்தில் இறந்தாரா? அல்லது வேறுஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News