உள்ளூர் செய்திகள்
.

கிராவல் மண் கடத்திய மினி லாரி பறிமுதல்

Published On 2022-06-03 08:11 GMT   |   Update On 2022-06-03 08:11 GMT
பரமத்தி வேலூர் தாலுகாவில் கிராவல் மண் கடத்திய மினி லாரி பறிமுதல் செய்தனர்.
பரமத்திவேலூர்:

பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தியிலிருந்து கபிலர்மலை செல்லும் சாலையில் மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே பரமத்தி கிராம நிர்வாக அலுவலர் ஆர்த்தி மற்றும் உதவியாளர் சுதாகர் ஆகியோர் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது உரிய ஆவணங்கள் இன்றி கிராவல் மண் எடுத்து வந்து தெரியவந்தது. அதிகாரிகளை பார்த்ததும் மினி லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து மினி லாரியையும், அதிலிருந்த கிராவல் மண்ணையும் பறிமுதல் செய்து பரமத்தி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மினி லாரி டிரைவர் திருப்பூர் மாவட்டம், சோமனூர் ரோடு, வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த மனோகரன் (55) என்பவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News