search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mud"

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஆனந்த குளியல் போட்டது
    • கருமலை எஸ்டேட் பகுதியில் 12 காட்டு யானைகள் சுற்றியதால் பரபரப்பு

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப்பகுதி அருகில் சேற்றில் உறங்கிய காட்டு யானைகளை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து வியந்தனர்.

    வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தேயிலைத் தோட்டம் வழியாக ஆறு, குடியிருப்பு போன்ற இடங்களில் சுற்றி வருகிறது.

    இதை சுற்றுலாப் பயணி களும், பொதுமக்களும் பார்த்து வருகின்றனர், சில நேரங்களில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளை இடித்தும் சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் 12 காட்டு யானைகள் சுற்றி வந்தது.

    இதில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் ஆனந்த குளியல் இட்டு சேற்றில் உறங்கியது. இதை அவ்வழியாக வந்த பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பார்த்து ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர். 

    • பக்தர்கள் உடல் முழுவதும் சேறு பூசி வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்

    பசும்பொன்

    கமுதி அருகே செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோவில் ஆவணி பொங்கல் திருவிழா கடந்த 3-ம் தேதி காப்பு கட்டி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    பின்னர் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 9-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு பெண்கள் திருவிளக்கு பூஜை கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பக்தி பாடல் பாடி பூஜை நடத்தினர்.பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    10-ம் நாள் திருவிழாவில், நேற்று இரவு வான வேடிக்கை மேளதாளங்க ளுடன் கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று காலை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அழகு வள்ளியம்மனுக்கு பக்தர்கள் அக்கினி சட்டி எடுத்தல் மற்றும் கரும்பாலை தொட்டில், பூக்குழி இறங்குதல், உடல் முழுவதும் சேறு பூசி சேர்த்தாண்டி வேடமிடும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அப்பகுதியில் உள்ள ஊரணியில் உடல் முழுவதும் சேறு பூசி, மேள தாளத்துடன் கையில் வேப்பிலை யுடன் ஆட்டமாடிக் கொண்டு, கிராமத்தில் இருந்து அழகு வள்ளியம்மன் கோவில் வரை வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பின்னர் மாலையில் சாக்கு வேடம் அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் களை நிறைவேற்றுதல், பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக சென்று அம்மன் ஆலயம் வலம் சென்று ஆற்றில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்

    • மண் பாண்டங்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் 25க்கும் அதிகமான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அகல் விளக்குகள் தயாரிப்புக்கு, பிரத்யேகமான மண் தேவையாகும்.

    உடுமலை :

    உடுமலை அருகே புக்குளம், மரிக்கந்தை, பூளவாடி, பள்ளபாளையம், சாளையூர் உட்பட பல கிராமங்களில் பாரம்பரியமாக மண் பாண்டங்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் 25க்கும் அதிகமான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.அகல் விளக்குகள் தயாரிப்புக்கு, பிரத்யேகமான மண் தேவையாகும். இவ்வகை மண் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கோதவாடி குளத்திலும், திருப்பூர் மாவட்டம் கொழுமம் கோதையம்மன் குளத்தில் மட்டுமே கிடைக்கிறது.

    தொழிலாளர்கள் கூறுகையில், கோதவாடி குளத்தில் கிடைக்கும் மண் மட்டுமே, மண்பாண்டங்கள் மற்றும் அகல் விளக்கு தயாரிப்புக்கு உகந்ததாகும்.ஆனால், அங்கிருந்து மண் எடுத்து வர பல்வேறு விதிமுறைகளை வருவாய்த்துறையினர் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே வாகன வாடகை உட்பட காரணங்களால், மண் எடுத்து வர செலவாகிறது. ஒவ்வொரு முறையும் வாகனத்தோடு சென்று வருவாய்த்துறை தடை விதிப்பதால் ஏமாற்றத்துடன் திரும்பி வர வேண்டியுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நீர்நிலைகளில் இருந்து மண்பாண்ட தொழிலாளர்கள் விலையில்லாமல், களிமண், வண்டல் மண், சவுடு மண், சரளை மண் எடுத்து கொள்ள அனுமதித்து, விலையில்லாமல் பெற்று கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.இந்த அறிவிப்பு முறையாக செயல்படுத்தப்படவில்லை. உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நேரடியாக அனுமதிச்சீட்டு வழங்க வேண்டும்.இதே போல் கோதையம்மன் குளத்திலும் மண் எடுப்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  

    • நேற்றிரவு 8 மணி முதல் 11 மணி வரை பரவலாக மழை பெய்தது.
    • தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்றிரவு 8 மணி முதல் 11 மணி வரை பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. ஏற்கனவே மழையால் சாலைகள் சிதலமடைந்து இருந்த நிலையில் நேற்று பெய்த மழையால் மேலும் சேதமடைந்தன. பல இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறின.

    மழையின் காரணமாக தீபாவளி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் கவலையடைந்தனர். குறிப்பாக தரைக்கடை வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.  

    • சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் மழைநீர் தேங்கி நிற்கிறது.
    • மக்கள் தங்கள் வீடுகளுக்கு சேற்றில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    பூதலூர்:

    பூதலூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்கிறது.

    பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும் இரவில் மழை பெய்கிறது.

    மழை காரணமாக பல தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் பல்வேறு சுகாதார கேடுகள் விளையும் அபாய நிலைஏற்பட்டு உள்ளது.

    பூதலூர் நகரில் உள்ள சந்து தெருவில் சிறிய அளவில் மழை பெய்தாலும் பெரிய அளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.தேங்கிய தண்ணீர் வடிவதற்கு வழி இல்லாமல் துர்நாற்றம் வீ சூவதோடு கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உள்ளது.

    இதைப்போலவே கோவில்பத்து ஊராட்சியில் கல்லணை கால்வாய் கரையோரம் உள்ள பாத்திமா நகர் பகுதியில் பிரதான சாலையில் குண்டும் குழியுமாக உள்ளதால் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் இந்த சாலை வழியாக இந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல சேற்றில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.மேலும்இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டுவதில் சிரமமும் உள்ளது.

    இந்த சாலை வழியாக பகுதி மக்களின் மயானமும் உள்ளதால் அங்கு செல்வதும் சிரமம் ஆக உள்ளது.

    இது குறித்து பலமுறை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அனைவருக்கும் புகார்கள் அனுப்பியும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை என்று இந்த இரண்டு பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    தொடர்ந்து மழை பெய்யும் என்ற நிலையிலும், வடகிழக்கு பருவமழை தொடங்கும் சூழ்நிலையில் இதுபோல தண்ணீர் தேங்கியு இடங்களை கண்டறிந்து போதிய வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று இந்த பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    பரமத்தி வேலூர் தாலுகாவில் கிராவல் மண் கடத்திய மினி லாரி பறிமுதல் செய்தனர்.
    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தியிலிருந்து கபிலர்மலை செல்லும் சாலையில் மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே பரமத்தி கிராம நிர்வாக அலுவலர் ஆர்த்தி மற்றும் உதவியாளர் சுதாகர் ஆகியோர் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது உரிய ஆவணங்கள் இன்றி கிராவல் மண் எடுத்து வந்து தெரியவந்தது. அதிகாரிகளை பார்த்ததும் மினி லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து மினி லாரியையும், அதிலிருந்த கிராவல் மண்ணையும் பறிமுதல் செய்து பரமத்தி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

    இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மினி லாரி டிரைவர் திருப்பூர் மாவட்டம், சோமனூர் ரோடு, வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த மனோகரன் (55) என்பவரை தேடி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம் அருகே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது பேரூர்மதுராகுப்பம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள வயல்வெளியில் சேற்றில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து ஏராளமானோர் அங்கு திரண்டனர். இது குறித்து அவர்கள் சோழத்தரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர்.

    அதில் அந்த வாலிபரின் முதுகு மற்றும் உடலின் சில இடங்களில் காயங்கள் இருந்தன. அந்த வாலிபர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து வாலிபர் அணிந்திருந்த உடைகள் மற்றும் வேறு ஏதாவது பொருள் கிடக்கிறதா? என்று சம்பவ இடத்தை சுற்றிலும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது சம்பவ இடத்தின் அருகே சட்டை மற்றும் கைலி ஒன்று கிடந்ததை பார்த்தனர். சட்டை முழுவதும் சேறும் சகதியுமாக இருந்தது. கைலியின் அருகே கிடந்த ஒரு பேப்பரில் மொபைல் நம்பர் எழுதி இருந்தது.

    ஆனால் அதில் கடைசி 2 இலக்க நம்பர் இல்லை. இதனால் அந்த நம்பரை தொடர்பு கொண்டு பேச முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அந்த நம்பரை தொலை தொடர்பு நிறுவனத்திடம் கொடுத்து ஏதாவது விவரம் கிடைக்குமா என்று போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

    வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே சம்பவ இடத்தை சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டார்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வாலிபரை மர்ம மனிதர்கள் அடித்து கொலை செய்து உடலை சேற்றில் வீசி சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வாலிபரை கொலை செய்தது யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சந்தேகபடும்படியாக கிராமத்தில் யாராவது நடமாடினார்களா? என்று பொதுமக்களிடம் போலீசார் விசாரித்தனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு செல்லும் மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் அண்ணிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பாளயபாடி கிராமத்தில் திருமானூர் பாசன வாய்க்கால் கரையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளிக்கு செல்லும் சாலையானது கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மண் சாலையாக அமைக்கப்பட்டு இருந்தது.

    தற்போது பெய்த மழையின் காரணமாக இந்த மண் சாலை மிகவும் மோசமான நிலையில் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையின் வழியாக நேற்று நடந்து சென்ற ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டனர். பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் இந்த சேற்றில் தவறி விழுந்து விடுகின்றனர். மேலும் ஆங்காங்கே சாலையில் பள்ளம் ஏற்பட்டு அதில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு செல்லும் மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஏம்பலத்தில் ஏரியில் தவறி விழுந்த வாலிபர் சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்து போனார்.

    புதுச்சேரி:

    புதுவை ஏம்பலம் வெற்றிவேல் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, கூலித்தொழிலாளி. இவரது ஒரே மகன் செல்வகுமார் (வயது28). ஒரே மகன் என்பதால் செல்வகுமாரை அவரது பெற்றோர் அதிகம் பாசம் வைத்து அவர் கேட்கும் போதெல்லாம் செலவுக்கு பணம் கொடுத்து வந்தனர்.

    இதனால் செல்வகுமார் வேலைக்கு எதுவும் செல்லாமல் பெற்றோர் கொடுக்கும் பணத்தில் எப்போதும் மதுகுடித்து செலவழித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மதுகுடிக்க பெற்றோரிடம் பணம் வாங்கி சென்ற செல்வகுமார் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. வெகுநேரமாக செல்வகுமார் வீடு திரும்பாததால் உறவினர்கள் செல்வகுமாரை தேடி அங்குள்ள வண்ணான் ஏரி பகுதிக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது ஏரிக்கரையில் காலி மதுபாட்டிலும் சேற்றில் சிக்கிய நிலையில் செல்வகுமார் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குடிபோதையில் ஏரியில் இறங்கி கால் கழுவ சென்ற போது செல்வகுமார் தவறி விழுந்து சேற்றில் சிக்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் மங்களம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×