search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வால்பாறையில் சேற்றில் தூங்கிய யானைகளை பார்த்து சுற்றுலாபயணிகள் வியப்பு
    X

    வால்பாறையில் சேற்றில் தூங்கிய யானைகளை பார்த்து சுற்றுலாபயணிகள் வியப்பு

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஆனந்த குளியல் போட்டது
    • கருமலை எஸ்டேட் பகுதியில் 12 காட்டு யானைகள் சுற்றியதால் பரபரப்பு

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப்பகுதி அருகில் சேற்றில் உறங்கிய காட்டு யானைகளை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து வியந்தனர்.

    வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தேயிலைத் தோட்டம் வழியாக ஆறு, குடியிருப்பு போன்ற இடங்களில் சுற்றி வருகிறது.

    இதை சுற்றுலாப் பயணி களும், பொதுமக்களும் பார்த்து வருகின்றனர், சில நேரங்களில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளை இடித்தும் சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் 12 காட்டு யானைகள் சுற்றி வந்தது.

    இதில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் ஆனந்த குளியல் இட்டு சேற்றில் உறங்கியது. இதை அவ்வழியாக வந்த பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பார்த்து ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.

    Next Story
    ×