உள்ளூர் செய்திகள்
மாயமான பள்ளி மாணவியை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அம்பேத்கர் நகரைச்சேர்ந்த இளையராஜா மகள் அபிநயா (வய து 15 ) இவர் ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று கடையில் பேனா வாங்கி வருவ தாக கூறிவிட்டு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. உறவினர்கள், உட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால், மாணவியின் தாயார் கோமதி
ஆலங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் சப் - இன்ஸ்பெக் கலைச்செல்வம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.