உள்ளூர் செய்திகள்
ஏ.ஜி.வெங்கடாஜலம்

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினராக அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. நியமனம்

Published On 2022-06-02 11:20 GMT   |   Update On 2022-06-02 11:20 GMT
மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினராக அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டார்.
அந்தியூர்:

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினராக அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்தி றனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அலுவல்சார்ந்த உறுப்பினர்களாக அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் உள்பட 3 எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் மாநில அளவில் மாற்றுத்திரனாளிகளின் நலன் குறித்து கலந்தாய்வு மற்றும் ஆலோசனை வழங்கும் அமைப்பாக இவ்வாரியம் இருக்கும். 

மேலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் கொள்கைகளை வகுப்பதில் உறுதுணையாகவும் செயல்படும். சட்டங்கள் சட்ட முன் வரை மற்றும் திட்டங்களை வகுப்பதில் இவ்வாரியம் ஆலோசனை வழங்கும். மாற்றுத் திறனாளிகள் நலன் குறித்து செயல்படும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகள் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்தல் ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும்.
Tags:    

Similar News