உள்ளூர் செய்திகள்
பண்ருட்டியில் ஆண் குழந்தை பெற்றெடுத்த 10-ம் வகுப்பு மாணவி
பண்ருட்டி பாட்டி வீட்டுக்கு வந்த 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
கள்ளக்குறிச்சி அருகே உள்ள பூனூரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அந்த மாணவி பண்ருட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்தார்.
அப்போது அங்கு அந்த மாணவிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக அந்த மாணவி பாட்டி உதவியுடன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
அங்கு அந்த மாணவியை டாக்டர்கள் பரிசோதித்த போது பிரசவ வலியால் துடித்தது தெரியவந்தது. அப்போது மாணவியின் நிலைமை மோசனமானது. உடனடியாக அந்த மாணவி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இன்று அதிகாலை அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது மாணவியும், குழந்தையும் நலமாக உள்ளனர்.
இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தபோது பூனூரை சேர்ந்த கூல்டிரிங்ஸ் கடை நடத்தி வரும் வாலிபர் அடிக்கடி பலாத்காரம் செய்தார். இதன் விளைவாக அந்த மாணவி கர்ப்பமானது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள பூனூரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அந்த மாணவி பண்ருட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்தார்.
அப்போது அங்கு அந்த மாணவிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக அந்த மாணவி பாட்டி உதவியுடன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
அங்கு அந்த மாணவியை டாக்டர்கள் பரிசோதித்த போது பிரசவ வலியால் துடித்தது தெரியவந்தது. அப்போது மாணவியின் நிலைமை மோசனமானது. உடனடியாக அந்த மாணவி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இன்று அதிகாலை அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது மாணவியும், குழந்தையும் நலமாக உள்ளனர்.
இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தபோது பூனூரை சேர்ந்த கூல்டிரிங்ஸ் கடை நடத்தி வரும் வாலிபர் அடிக்கடி பலாத்காரம் செய்தார். இதன் விளைவாக அந்த மாணவி கர்ப்பமானது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.